close
Choose your channels

நடிகை - அமைச்சர் ரோஜாவுக்கு என்ன ஆச்சு? சென்னை அப்பலோவில் அனுமதி..!

Saturday, June 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவரும் தற்போது ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக இருப்பவருமான ரோஜா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இதன் பிறகு அவர் ஆந்திர அரசியலில் ஈடுபட்டார் என்பதும் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக ஆன அவருக்கு தற்போது இளைஞர் நலம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது அவர் தமிழகத்துக்கும் வருகை தருவார் என்பதும் ஊடகங்களுக்கு பேட்டி தருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைகள் அமைச்சர் ரோஜா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.