close
Choose your channels

சட்டசபையில் மீசையை முறுக்கி தொடையை தட்டிய பாலகிருஷ்ணா.. பதிலடி கொடுத்த ரோஜா..!

Friday, September 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆந்திர மாநில சட்டசபையில் மீசையை முறுக்கி தொடையை நடிகர் பாலகிருஷ்ணா தட்டிய நிலையில் அதற்கு அமைச்சரும் நடிகையுமான ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று சட்டசபை தொடங்கிய நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினர் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏ மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா சட்டசபையில் தொடையை தட்டி மீசையை முறுக்கி சந்திரபாபு நாயுடுவை சட்டவிரோதமாக கைது செய்ததாக பேசினார்.

அதற்கு சட்டசபையில் பதில் அளித்த அமைச்சர் ரோஜா ’தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே, நாங்கள் 157 பேர் இருக்கிறோம், எங்களை சட்டப்பேரவையில் மதிக்கவில்லை என்றால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள்.

மேலும் நாங்கள் அமைதியாக இருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் சபையை மதிக்கிறோம், தெலுங்கு தேச கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.

நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால், நாங்கள் யாரும் நாங்கள் பயப்பட மாட்டோம், இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணா மக்களுக்காக சட்டசபையில் எதையும் செய்யாமல், பெண்களை இழிவாக பேசுவது தான் வழக்கம் என்றும் அவர் கூறினார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.