close
Choose your channels

2 வாரங்களுக்கு முன் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

Friday, September 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆன படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 16ஆம் தேதி ’சியா’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியான நிலையில் அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர் நடிகை அகன்ஷா மோகன். இவர் ஒரு மாடல் அழகி என்பதும் பல விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார் என்பதும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மும்பையில் உள்ள அந்தேரி மேற்கு என்ற பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அகன்ஷா மோகன், திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

மேலும் அந்த அறையை சோதனை செய்தபோது கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் ’எனது தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல என்றும் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் நான் மகிழ்ச்சியாக இல்லை அமைதியை மட்டுமே விரும்புகிறேன்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos