close
Choose your channels

திருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து ஏன்? மனம் திறந்த காயத்ரி ரகுராம்

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம், தனது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது ஏன் என்பது குறித்து நமக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன் பிறகு அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தீபக் சந்திரசேகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. அதாவது 2008ஆம் ஆண்டு காயத்ரி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார் என்றும் இந்த வழக்கு 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் காயத்ரி ரகுராம் தனது திருமண வாழ்க்கை குறித்து கூறியுள்ளார். மிகவும் சின்ன வயதில் தனக்கு திருமணம் ஆனதாகவும், அதனால் சில கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்காக அவரையும் நான் குற்றம் சொல்லப்போவதில்லை என்றும் அவர் தனது இன்னொரு வாழ்க்கையை தேடி சென்று விட்டார் என்றும் அதனால் இதுபற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது அர்த்தமே இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் தான் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்து விட்டதாகவும் அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியின் முழு வீடியோ  இதோ:

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.