close
Choose your channels

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு பாட்டு பாடும் வீடியோ வைரல்!

Thursday, May 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைஉலகின் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

கௌதம் மேனன் இயக்கிய ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ’ஆயிரத்தில் ஒருவன்’ ‘மங்காத்தா’ ’விஸ்வரூபம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு சிறந்த பாடகியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆண்ட்ரியா கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து கொண்டிருப்பதாகவும், நாடு மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா இசையமைத்து பாட்டு பாடும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்ட்ரியா, ‘அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.