நானும் பெஹல்காம் சென்றுள்ளேன்: பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து நடிகை ஆண்ட்ரியா


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்த தாக்குதலை மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம் என நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஒரு காலத்தில் நானும் பெஹல்காம் பகுதியில் ஒரு சுற்றுலாப் பயணியாக இருந்தேன்...
தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு என் இதயம் வலிக்கிறது. ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் கண்காணிப்பும் சந்தேகமும் சந்திக்க வேண்டிய காஷ்மீர் மக்களுக்கு என் இதயம் மேலும் வலிக்கிறது.
நம் நாடு நாளுக்கு நாள் மத வேறுபாடுகள் காரணமாக பிளவுபட தொடங்கிய இந்த நேரத்தில், ஒரு குடிமகளாக நம்முடைய கடமை என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது மதத்தை குறிவைத்து கொள்கிற வெறுப்புகளால் பாதிக்கப்படாமல் இருப்பதே.
நான் எப்போதும் என் எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் இது பேசப்பட வேண்டிய ஒன்று என்று உணர்ந்தேன். என் கமெண்ட் பகுதியில் மட்டுமல்ல, நம் உலகத்தில் கூட வெறுப்பிற்கு இடமில்லை’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் பெஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற போது அந்த பகுதி மக்களுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com