close
Choose your channels

என்னை கேட்டால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி என்று சொல்வேன்: பிரபல நடிகை

Saturday, April 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிந்தி தான் தேசிய மொழி என சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கூறிய நிலையில் அதற்கு நடிகர் கிச்சா சுதீப் கொடுத்த பதிலடி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தென்னிந்திய திரைப்பட உலகினர் பலர் கண்டனம் தெரிவித்தார்கள் என்பதும், இந்தியாவில் தேசிய மொழி என்பதே கிடையாது என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜய் தேவ்கான் கூறிய சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ’என்னைக்கேட்டால் இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் தான் சொல்வேன்’ என்று கூறியுள்ளார்.

’தமிழ், கன்னடம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளை விட சமஸ்கிருதம்தான் பழமையானது என்றும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் இந்த அனைத்து மொழிகளும் உருவாகியது’ என்றும் அதனால் சமஸ்கிருதம் மொழியை ஏன் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க கூடாது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

நடிகை கங்கனா ரனாவத் இந்த கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் மாறிமாறி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.