செல்பி எடுக்க அனுமதிக்காத நடிகை: ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயல்!

  • IndiaGlitz, [Saturday,April 30 2022]

பிரபல நடிகை ஒருவர் செல்பி எடுக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக ஆத்திரத்தில் ரசிகர்கள் செய்த மோசமான செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ’கொடி’, அதர்வா நடித்த ’தள்ளிப்போகாதே’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் கடை திறப்பு விழாவுக்கு அனுபமா பரமேஸ்வரன் சென்றிருந்தார். அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து கடை திறப்பு விழாவை முடித்துவிட்டு அவர் திரும்பும் போது அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் ரசிகர்களை செல்பி எடுக்க அனுபமாஅனுமதிக்காமல் காரில் ஏற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அனுபமாவின் கார் டயரில் உள்ள காற்றை பிடுங்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுபமாவை கடை உரிமையாளர்கள் வேறொரு காரில் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் படத்தின் டைட்டில் இதுவா?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும்  அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த

'விக்ரம்' பிளாஷ்பேக் காட்சியில் இந்த பிரபல நடிகை நடித்துள்ளாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் பிரபல நடிகை ஒருவர் 10 நிமிட காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

என்னை பொருத்தவரை மோடி-அம்பேத்கர் ஒப்பீடு சரிதான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

என்னை பொருத்தவரை பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் எந்தவித தவறும் இல்லை என தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், திருமணம்

இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

 இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் பரிசாக கொடுத்ததாக நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன .