பாவனாவை கடத்தியது ஏன்? சுனில்குமாரின் அதிர்ச்சி வாக்குமூலம்

  • IndiaGlitz, [Saturday,February 25 2017]

பிரபல நடிகை பாவனா சமீபத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நான்குபேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியும், பாவனாவின் முன்னாள் டிரைவருமான சுனில்குமார் நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில் சுனில்குமாரிடம் கேரள போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இந்த வாக்குமூலத்தில் சுனில்குமார் கூறியதாவது:

“எனது காதலியை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ நினைத்தேன். அதற்கு பணம் தேவைப்பட்டது. பாவனாவிடம் ஏற்கெனவே ஓட்டுநராக இருந்ததால் அவரிடம் பணம் உள்ள விவரம் தெரியும். அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனில் பதிவு செய்து மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறிக்கலாம் என நினைத்தேன்” என்று போலீஸ் விசாரணையின்போது சுனில்குமார் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய செல்போனை சாக்கடையில் எறிந்து விட்டதாக போலீஸாரிடம் அவர் தெரிவித்ததை அடுத்து போலீசார் அவரை அழைத்துக் கொண்டு, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சாக்கடைகளில் செல்போனை தேடினர். ஆனால் செல்போன் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் சுனில்குமாரின் காதலிக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரையும் விரைவில் போலிசார் விசாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இசைக்குடும்பத்தில் பிறந்த கங்கை அமரன் அவர்களின் மகனும், 'மங்காத்தா' உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயற்றிய இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நமது சார்பில் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...

சிபிராஜின் 'கட்டப்பாவை காணோம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை' படங்களை அடுத்து சிபிராஜ் நடித்து வந்த படம் 'கட்டப்பாவை காணோம்'. வித்தியாசமான டைட்டிலை கொண்ட இந்த படத்தை மணிசெய்யான் இயக்கி வந்தார்...

ஆர்யா-ராணா-விஷால். த்ரிஷாவுக்கு பிடித்த ஹீரோ யார்?

பிரபல நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு பிரச்சனையின்போது சமூக வலைத்தளத்தில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருந்தார் என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அந்த தளத்தில் புகுந்துள்ள த்ரிஷா, சற்று முன்னர் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்தார். இதோ ரசிகர்களின் கேள்வியும், த்ரிஷாவின் பதில்களும்...

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரனில் இணைந்த இன்னொரு ஹீரோ

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் சென்னை படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளதாகவும், அங்கு 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

ஜெயம் ரவியின் 'வனமகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவி நடித்த 'போகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வெற்றி பட வரிசையில் இணைந்துள்ள நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படமான 'வனமகன்' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்ப்பு முடிந்தது என்பதை பார்த்தோம்...