close
Choose your channels

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை: ஆண் நண்பரிடம் விசாரணை

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய ஆண் நண்பரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பெங்காலி நடிகை மற்றும் மாடல் பிதிசா டி மஜூம்தார், கொல்கத்தாவில் அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக தனியாக தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பிதிசா டி மஜூம்தார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் பிதிசா டி மஜூம்தார் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் அவரது ஆண் நண்பரின் மோசமான நடவடிக்கையால் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து பிதிசாவின் ஆண் நண்பர் அனுபாப் பேராவிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை பல்லவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது குறித்து தனது மன வருத்தத்தை பிதிசா தெரிவித்து இருந்த புதுசா தற்போது அவரே தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos