close
Choose your channels

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்

Saturday, August 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்த நல்லெண்ணெய் சித்ரா திடீரென காலமானார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நடிகை நல்லெண்ணெய் சித்ரா சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஊர்காவலன்’, சரத்குமார் நடித்த ’சேரன் பாண்டியன்’ பிரபு நடித்த ’என் தங்கச்சி படிச்சவ’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார்

இந்த நிலையில் நல்லெண்ணெய் சித்ரா மறைவை அடுத்து திரை உலக பிரபலங்கள் அவருடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நல்லெண்ணெய் சித்ரா கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.