close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிவி சீரியல் நடிகை உயிரிழப்பு: அதிர்ச்சியில் சின்னத்திரை!

Monday, December 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டிவி சீரியல் நடிகை ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்ததை அடுத்து சின்னத் திரை உலகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக எஸ்பி பாலசுப்பிரமணியன் உள்பட ஒருசில திரை உலகினர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை திவ்யா பட்னாகர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நடிகை பட்னாகர் மருத்துவமனையில் இருக்கும்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமடைவேன் என்று நம்புவதாகவும் எனக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை திடீரென மோசமானதை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது. செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நடிகை திவ்யா பட்னாகர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த டிவி சீரியல் நடிகர் திவ்யாவுக்கு வயது 34. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திவ்யா பட்னாகர் திடீரென உயிரிழந்தது சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.