மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ஊட்டியில் முதல்வர் ஜாலியாக இருக்கிறார்: நடிகை கெளதமி


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை கெளதமி சில ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
நான் ஒரு விஷயத்தை மிகவும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். அண்ணன் எடப்பாடி அவர்களுக்கு இருக்கும் சீனியாரிட்டிக்கும் அவருக்கு இருக்கிற புரிதலுக்கும், அவருக்கு இருக்கும் அரசியல் பார்வைக்கும் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது. எந்த நேரத்தில் கூட்டணியில் என்னென்ன முக்கியம், எதை எதை சொல்ல வேண்டும், வெற்றிக்காக எதை முன் வைத்து போராட வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
எனவே, கூட்டணி என்பது பிரச்சனையாக வாய்ப்பே இல்லை. கூட்டணிக்கான தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.
தமிழகத்தில் அதிக அளவு பிரச்சினை இருக்கிறது. எந்த துறையில் பிரச்சனை இல்லை என்பதைத்தான் தேட வேண்டும். அப்படி ஒரு மாநிலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும். எல்லாருமே இதை ஒத்துக்கொள்வார்கள்.
இப்படி இருக்கிற ஒரு சூழ்நிலையில், இவ்வளவு கஷ்டமான, இக்கட்டான, கொடூரமான சூழ்நிலை இருக்கும் போது, முதலமைச்சர் ஊட்டியில் போய் குளு குளுவென இருக்கிறார். அழகான பூக்களை பார்த்து ரசித்து, போட்டோ எடுக்கிறார்.
இவர் எப்படி மக்கள் கஷ்டத்தை புரிந்து கொள்வார்? மக்கள் கஷ்டத்தை தீர்ப்பதற்கு எந்த அளவுக்கு அவர் பாடுபடுகிறார் என்பது தெரிய வருகிறது, எதுவுமே இல்லை. இவ்வாறு நடிகை கெளதமி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com