close
Choose your channels

ஒரே ஒரு வெற்றிப்படம் தான்.. நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை?

Wednesday, April 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரை உலகில் ஒரே ஒரு வெற்றிப்படம் கொடுத்த நடிகை தற்போது நயன்தாரா, சமந்தாவை விட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளன.

துல்கர் சல்மான், ராஷ்மிகா நடிப்பில் உருவான ’சீதா ராமம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார் என்பதும் அவரது இளவரசி நூர் மற்றும் சீதா மகாலட்சுமி என்ற கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நானியின் 30-வது படத்தில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. ’சீதா ராமம்’ படத்தில் அவர் வெறும் ரூ.2 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி இருந்த நிலையில் தற்போது அவர் மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்திய திரை உலகை பொருத்தவரை நயன்தாரா, சமந்தா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் ஒரு திரைப்படத்திற்கு ரூ.5 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படும் நிலையில் இவர்களை விட ஒரே ஒரு வெற்றிப் படம் கொடுத்த மிருணாள் தாக்கூர் ரூ.6 கோடி சம்பளம் வாங்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்த அளவிற்கு கிளாமர் என்றாலும் ஓகே என்று அவர் சொல்லியதால் தான் அவருக்கு ’நானி 30’ படத்தில் மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.