ஆடம்பர பங்களா, கிலோ கணக்கில் தங்கம், கார்.. தமிழ் நடிகைக்கு ரூ.30 கோடி பரிசளித்த கணவர்!

  • IndiaGlitz, [Tuesday,November 08 2022]

தமிழ் நடிகை ஒருவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் அவருக்கு அவரது கணவர் ஆடம்பர பங்களா, தங்க நகைகள் மற்றும் கார் என சுமார் 30 கோடியில் பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பின்னர் அவர் ‘தகராறு’, ‘’சவரக்கத்தி’, ‘காப்பான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை பூர்ணாவுக்கு சமீபத்தில் திருமணம் ஆனது என்பதும், துபாயை சேர்ந்த ஆசிப் அலி என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்களை பூர்ணா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பூர்ணாவுக்கு அவரது கணவர் ஆசிப் அலி சுமார் 30 கோடியில் திருமண பரிசு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 2700 கிராம் தங்க நகைகள், 25 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா மற்றும் புத்தம் புதிய சொகுசு கார் ஆகியவைகளை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தனது நிறுவனத்தின் பங்குகளையும் தனது மனைவி பூர்ணாவுக்கு அவர் அளித்துள்ளதாகவும், இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் 30 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.