close
Choose your channels

மாம்பழ கூடையுடன் ஜெயலலிதா சமாதிக்கு வந்த நடிகை!

Thursday, June 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்யும் நடிகர், நடிகைகளில் ஒருவர் நடிகை விந்தியா. மற்ற நட்சத்திரங்களின் பேச்சை விட இவருடைய பேச்சு ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என்பதால் இவருடைய பேச்சை கேட்க பெருங்கூட்டம் வருவதுண்டு. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை இவரை ஒவ்வொரு தேர்தலிலும் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் நடிகை விந்தியா தற்போது திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதிலும் சும்மா இல்லை, கூடை நிறைய மாம்பங்களுடன் வந்து அதனை ஜெயலலிதா சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு அதன்பின்னர் அந்த மாம்பழங்களை அங்குள்ள பொதுமக்களுக்கு வழங்கினார்.

நடிகை விந்தியாவுக்கு ஆந்திராவில் மாம்பழ தோட்டம் ஒன்று இருப்பதாகவும், இந்த ஆண்டு அவருடைய தோட்டத்தில் மாம்பழங்கள் நல்ல விளைச்சல் என்பதால் தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை ஜெயலலிதா சமாதியில் வைத்து அவர் அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிகிறது. மேலும் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு ஆண்டும் தனது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos