close
Choose your channels

திமுக கமல்ஹாசனை விலைக்கு வாங்கியுள்ளது: சினேகனின் குற்றச்சாட்டுக்கு நடிகை ஜெயலட்சுமி பதில்!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாடலாசிரியர் சினேகன் தான் நடத்திவரும் அறக்கட்டளையின் பெயரில் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி நடத்தி அதன் மூலம் பணம் வசூல் செய்து வருவதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு தற்போது நடிகை ஜெலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சினேகம் என்ற பெயரில் முறையான ஆவணங்களுடன் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். எங்கள் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்யும் நற்பணிகள் அனைத்தையும் எங்களது அறக்கட்டளை பெயரில் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.

ஆனால் சினேகன் அவரது அறக்கட்டளை சார்பாக அப்படி எந்த விதமான நற்பணிகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக நான் பார்த்ததில்லை. சினேகன் கூறியது போல் அவரது தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த விதமான அழைப்புகளும் வரவில்லை.

அரசியல் நோக்கத்தின் காரணமாக என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. என்னை தவறாக சித்தரிக்கும் விதமாக சினேகன் பேசியுள்ளார். இந்த பொய்யான குற்றச்சாட்டுக்குப் பின்னால் கமல்ஹாசனும் இருப்பதாக எனக்கு சந்தேகமாக உள்ளது. திமுக கமல்ஹாசனை வாங்கியுள்ளது. திமுகவும், மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்றுதான். திமுக அதிகப் பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

சினேகன் என் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அப்படி அவர் குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.