ரஜினி, கமல் பட நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

  • IndiaGlitz, [Wednesday,March 15 2017]

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின்கபூர் நேற்றிரவு திடீரென அவரது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவாஜி கணேசன் நடித்த பட்டாகத்தி பைரவன்', ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்', கமல்ஹாசன் நடித்த 'சொல்லத்தான் நினைக்கின்றேன்' மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நாயகி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை ஜெயசுதா. இவர் கடந்த 1985ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதரர் நிதின்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரான நிதின்குமார் சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயன் நடித்த படம் ஒன்றை தயாரித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்ததால் அவருக்கு பணநெருக்கடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக நேற்று மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

More News

கோவாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் பாஜக 13 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது...

ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கெளதமியா?

பிரபல நடிகை கெளதமி, நடிப்பில் மட்டுமின்றி சமூகசேவையிலும் ஈடுபட்டு வருபவர் என்பதும் மனதில் தோன்றிய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துபவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று பல அரசியல் கட்சி தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து முதன்முதலாக தைரிய

ஒருபக்கம் விபூதி, இன்னொரு பக்கம் குங்குமம். தமிழக அரசியலில் ஆன்மீகம்

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனியாக பேரவை ஒன்றை ஆரம்பித்து அரசியலில் சமீபத்தில் நுழைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணிடம் சில்மிஷம். பிரபல தயாரிப்பாளர் கைது

நடிகர், நடிகைகளின் ஆடம்பரமான வெளிப்புற பகட்டை நம்பி திரையுலகில் நாமும் சாதிக்கலாம் என்று நாள்தோறும் புதிய முகங்கள் திரையுலகில் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் ஆரம்பமாகும் 'போஸ்டல் வங்கி'

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு பிரச்சனை ஏற்பட்டபோது வங்கி வாடிக்கையாளர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. நம்முடைய கணக்கில் இருந்த பணத்தை எடுக்க பல கண்டிஷன்கள்.