close
Choose your channels

அம்மாவின் கனவை நனவாக்குவேன்: மறைந்த நடிகையின் மகள் பேட்டி

Friday, December 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த ’சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவர் பிரபல நடிகை ஊர்வசியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கல்பனா காலமான நிலையில் அவரது மகள் ஸ்ரீமயி தற்போது ஒரு மலையாள படத்தில் அறிமுகமாகியுள்ளார். விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் ஸ்ரீமயி, படித்து முடிக்கும் முன்னரே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: என் தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா ஆகியோர் அனைவரும் நடிகர் என்றாலும், நான் நடிகையாவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், ஏனெனில் எனக்கு மிகுந்த கூச்ச சுபாவம் என்பதால் பள்ளியில் மாறுவேடப் போட்டியில் கலந்து தயங்கியதாகவும் தெரிவித்தார். இருப்பினும் என் அம்மா நான் நடிகை ஆக வேண்டும் என்று விரும்பினார் என்றும் ஆனால் அவர் தனது விருப்பத்தை என்னிடம் சொல்லாமல் எனது பாட்டியிடம் மட்டுமே சொல்லி உள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் மறைந்த தனது அம்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த சினிமா வாய்ப்பை நான் பயன்படுத்தி சினிமாவில் படிப்படியாக முன்னேறுவேன் என்று கூறியுள்ளார். சினிமாவில் வெற்றி பெறுவது எளிமையானது அல்ல என்றும் கடினமாக உழைப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று தனது பாட்டி கூறியுள்ளதாகவும் அதன்படி நான் அர்ப்பணிப்புடன் உணர்வுடன் உழைத்து சினிமாவில் வெற்றி பெற்று என் அம்மாவின் கனவை நனவாக்குவேன் என்றும் நடிகை ஸ்ரீமயி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.