சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான். நடிகை கஸ்தூரி

  • IndiaGlitz, [Friday,March 17 2017]

சமீபத்தில் தான் சொல்லாத கருத்தை ஒருசில உப்புமா இணையதளங்கள் எழுதியதாக நடிகை கஸ்தூரி ஆவேசமாக வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் சினிமாத்துறையில் தான் இருந்தபோது சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். கஸ்தூரி கூறியதாவது:

சினிமா மட்டுமின்றி எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கின்றது என்பதே உண்மை. இந்த விஷயம் சினிமாவில் மட்டும்தான் வெட்டவெளிச்சமாகிறது. என்னை பொருத்தவரையில் நான் சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது சினிமாத்துறையில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ஒருசிலர் தான். ஆனால் சினிமாவையும் தாண்டி வெளியே உள்ள நபர்கள் அதாவது பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்கள் எனக்கு கொடுத்த தொல்லைகள் மிக அதிகம். நடிகைகள் என்றாலே தப்பானவர்கள் என்று ஒருசில பணக்காரர்கள் மனதில் தோன்றிய வக்ரம்தான் இதற்கு காரணம். அந்த மாதிரியான நபர்களிடம் 'நான் அப்படிப்பட்டவள் இல்லை' என்று ஒதுங்கி சென்றுள்ளேன். இதன் காரணமாக ஒருசில படங்களில் இருந்து நான் வெளியேற்றப்பட்டதும் உண்மைதான்.

ஒரு பெண் தன்னுடைய உழைப்பால் உயர்ந்தால் கூட சந்தேக கண்களுடன் இந்த உலகம் பார்க்கின்றது என்பது தான் வேதனையான ஒரு விஷயம். நடிகை என்றில்லை ஒரு அலுவலத்திலோ அல்லது தொழிலதிபராகவோ ஒரு பெண் பெரிய இடத்திற்கு வந்தால், அவர் தப்பான வழியின் மூலம்தான் பெரிய இடத்திற்கு வந்திருப்பார் என்று சந்தேகக்கண்களுடன் பலர் பார்ப்பதுதான் வேதனையாக விஷயம்' என்று ஆதங்கத்துடன் கஸ்தூரி கூறியுள்ளார்.

மேலும் அரசியலுக்கு சினிமாக்கார்கள் வருவது குறித்து கருத்து கூறிய கஸ்தூரி, 'திருடர்கள், கொள்ளைக்காரர்கள், தன்னுடைய குடும்பம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற சுயநலவாதிகள் எல்லாம் அரசியலில் இருக்கும்போது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கின்றது. இன்றைக்கு கமல்ஹாசன், ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், கவுதமி உள்பட பல சினிமாக்காரர்கள் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற விஷயங்களில் பாசிட்டிவ் குரல் கொடுத்தனர். இன்றைய சினிமா இளைஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றது. மாற்றம் முன்னேற்றம் என்பது இவர்களுக்கு மட்டும்தான் சொந்தமா, சினிமாக்காரர்களும் நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வரக்கூடாதா? என்று ஆவேச கேள்வி எழுப்பினார்,.

More News

அஜித்துக்கு அரசியல், விஜய்க்கு அத்தைப்பொண்ணு. ஹாலிவுட் இயக்குனரின் புதிய திட்டம்

ராஜ்திருசெல்வன் என்ற என்.ஆர்.ஐ, 'லேக் ஆப் ஃபையர்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்...

தோனி தங்கியிருந்த ஓட்டலில் திடீர் தீ விபத்து. போட்டி ஒத்திவைப்பு

கடந்த சில நாட்களாக விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

'பாகுபலி 2' படத்தில் நான்கு கிளைமாக்ஸா? ராஜமெளலி விளக்கம்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை புரிந்தது. இதிலிருந்தே இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளலாம்...

'காற்று வெளியிடை' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது...

ராஜமெளலியின் அடுத்த படத்தில் கிராபிக்ஸ் இல்லையா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படங்கள் என்றாலே முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று பிரமாண்டமான செட்கள் மற்றொன்று கிராபிக்ஸ். குறிப்பாக நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் உலக தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன...