close
Choose your channels

ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? கஸ்தூரி சந்தேகத்தை தீர்த்த ரஜினி தரப்பினர்!

Tuesday, June 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்தியாவிலிருந்து கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்காவுக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கும் தற்போது அமெரிக்கா செல்வதையும் பார்க்கும்போது சரியாக படவில்லை என்றும் இதனை ரஜினிகாந்த் விளக்கம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மத்திய அரசிடமிருந்து மருத்துவ விலக்கு பெற்று அமெரிக்கா செல்லும் அளவுக்கு அவரது உடலுக்கு அப்படி என்ன நேர்ந்தது என்றும், இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அவரது உடலில் என்ன பாதிப்பு என்ற கேள்வியையும் நடிகை கஸ்தூரி எழுப்பி இருந்தார்.

நடிகை கஸ்தூரியின் இந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ரஜினியின் தரப்பினர் அவருக்கு விளக்கம் அளித்துள்ளனர். இந்த விளக்கத்தை அடுத்து நடிகை கஸ்தூரி சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம்’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos