close
Choose your channels

அஜித், விஜய் பிறந்த நாளில் வீட்டை பூட்டிவிட்டு ஓடுகிறோம்: நடிகை கஸ்தூரி

Monday, September 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் பிறந்த நாளில் அவர்களது ரசிகர்களும் தொண்டர்களும் ஒலிபெருக்கியில் பாடல்களை ஒலிக்க வைத்து ஒலிமாசு ஏற்படுத்துவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதேபோல் கோவில் திருவிழாக்களிலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் அசெளகரித்தை பார்க்காமல் அதிகபட்ச ஒலியில் பாடல்கள் ஒலிப்பதை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், 'அஜித், விஜய், ஜெயலலிதா, கலைஞர் யார் பிறந்தநாள் வந்தாலும் முன்னெச்சரிக்கையாக வீட்டை பூட்டி கொண்டு ஓடுகிறோம். இதில் ஜோக் என்ன தெரியுமா? இந்த விஐபிக்கள் வீட்டு பக்கம் ஒரு சத்தம் இருக்காது' என்று கூறியுள்ளார்.

அதேபோல் கடவுள் பெயரால் நாட்கணக்கில் தொடரும் ஒலிமாசு , விதிமீறல்களை பொறுக்கமாட்டாமல் பொருமுவதாகவும், காதை செவிடாக்கி தலைவலி உண்டாக்குவதுதான் மாரியாத்தா மகிமையை போற்ற ஒரே முறையா? என்றும் நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். கஸ்தூரியின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி சமூக வலைத்தள பயனாளிகளிடம் இருந்து கிடைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.