close
Choose your channels

கோலம், குறள், காபி: ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் குறித்து தமிழ் நடிகை!

Thursday, November 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள் பிரிண்ட் செய்ய வேண்டுமென்று பாஜக பிரமுகர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து விரைவில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறள் பிரிண்ட் செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் மூன்றோடு ஆவின் பாலும் சேர்க்கிறது. நல்ல விஷயம்தானே? காலைப்பொழுது திருக்குறளோடு துவங்கும் . டிவி , FM ரேடியோவில் தினம் ஒரு குறள் சொல்கிறார்களே. கோலம், குறள், காபி என்று வழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

பால் கவர் குப்பைக்கு போகுமே என்று யோசிப்பதெல்லாம் ஓவர். குறள் எழுதும் பயிற்சி தாளும், ஏன் திருக்குறள் புத்தகமே கூட எடைக்கு போகிறது. நானெல்லாம் பள்ளியில் தமிழ் படிக்கவில்லை. பஸ்ஸில் தான் திருக்குறள் படித்து கற்றுக்கொண்டேன். தினம்தோறும் வீடு தேடி குறள் வருவது நல்ல விஷயம்தான்.

கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.