close
Choose your channels

அன்னையர் தினத்தில் சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி: வைரல் புகைப்படங்கள்!

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ரசிகர்களின் மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ’நந்தினி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் மாயா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை கீர்த்தி. இவர் சீரியல் நடிகர் ஜெய்தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ஜெய்தனுஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சந்திரலேகா’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக 1800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் ஜெய்தனுஷ் மற்றும் கீர்த்தி தம்பதியினர் விரைவில் பெற்றோர்களாக மாறப் போகிறார்கள். ஆம் நடிகை கீர்த்தி சமீபத்தில் கர்ப்பமானதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுகுறித்து நடிகை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி அவர் தனது வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் வெளியிட்டதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.