என்னை போலவே நீங்களும் நடந்துக்கோங்க: நடிகை கீர்த்தி சுரேஷின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,May 25 2021]

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸிலிருந்து முழுவதும் நம்மை பாதுகாக்க நாமே சில அடிப்படைத் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். அப்படியே சென்றாலும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். அவசியமான நேரத்தில் டபுள்மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அரசு கூறும் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள்

நான் என்னுடைய முதல் டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டேன். நீங்களும் இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுங்கள். இதைத்தான் நம் தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகின்றார்கள். இதை நீங்கள் பின்பற்றி நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டியது உங்களது பொறுப்பு கொரோனா நோய் வெல்வோம், மக்களை காப்பாற்றுகோம். கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம், நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்’ என நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் கருப்பு பூஞ்சை நோய் வருமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

இந்தியா முழுக்கவே தற்போது கருப்பு பூஞ்சை தொற்று குறித்த பீதி ஏற்பட்டு உள்ளது.

வட்டி கேட்டதால், கொலை செய்த கடன்காரன்...! கோவையில் பயங்கரம்...!

கடன் கொடுத்துவிட்டு, வட்டிக்கேட்ட பெண்ணை கொலை செய்துள்ளார் கோவையைச் சேர்ந்த வீராச்சாமி என்ற கொடூரன். இச்சம்பவம் பெரும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தை அழிக்க வந்த கொடூர வில்லன்கள் வைரஸ்? என்ன காரணம்?

உயிரினத்தை தாக்கும் நுண்ணுயிர் கிருமிகள்தான் இந்த பாக்டீரியாவும், வைரஸ்ஸும்.

ஆசிரியர் ராஜகோபாலன் விவகாரம்; 'ராட்சசன்' கேரக்டரை ஒப்பிட்டு இயக்குனர் ராம்குமார் டுவிட்!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு போஸ்கோ

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது