நடிகை குஷ்புவுக்கு என்ன ஆச்சு? கையில் காயத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை குஷ்புவுக்கு எதிர்பாராமல் ஏற்பட்ட காயம் குறித்த புகைப்படங்கள், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்த குஷ்பு, தற்போது தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் உள்ளார். அவர் எப்போதும் பிஸியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில், சமீபத்தில் திடீரென எதிர்பாராத விதத்தில் குஷ்பு கையில் காயம் ஏற்பட்டதாகவும், இதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.
மேலும், "எதிர்பாராமல் உங்களுக்கு காயம் ஏற்பட்டால், அதற்காக உங்கள் பணிகளை நிறுத்தி விட வேண்டாம். தொடர்ந்து பயணத்தை, புன்சிரிப்புடன் தொடருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நடிகை ராதிகா சரத்குமார் உள்பட பலரும், இவரது பதிவுக்கு லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments