close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினாரா கமல் பட நாயகி? 

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை விஜய் டிவி நிர்வாகம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இறுதிகட்ட போட்டியாளர்களின் பட்டியல் குறித்து ஏற்கனவே நாம் விரிவாக பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இரண்டு நடிகைகள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ’புன்னகை மன்னன்’ படத்தில் நடித்த ரேகா மற்றும் ’அன்பே சிவம்’ படத்தில் நடித்த கிரண் ஆகிய இருவரும் இந்த சீசனில் போட்டியாளர்களாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென நடிகை கிரண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகவிருப்பதாகவும், அவர் கேட்ட தொகையை விஜய் டிவி நிர்வாகம் கொடுக்காததால் அவர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்த பதிவு ஒன்றை நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, அதன்பின் அந்த பதிவை அவர் டெலிட் செய்து விட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.