அழுகிய நிலையில் கேட்பாரற்று கிடந்த நடிகையின் பிணம்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

பாலிவுட் நடிகை ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகா செளத்ரி என்பவர் பாலிவுட் நடிகையாகும் ஆசையில் கடந்த சிலவருடங்களுக்கு முன் மும்பை வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த கிருத்திகா, 'கங்கனா ரனாவத் நடித்த படம் ஒன்றில் சிறு கேரக்டரில் நடித்தார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், மாடலிங் தொழிலும் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென கடந்த சில நாட்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருத்திகா தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக பக்கத்து வீட்டினர் கொடுத்த தகவலின்பேரில் மும்பை போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனார். அங்கு கிருத்திகாவின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடனடியாக பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுபி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கிருத்திகாவை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்றும் இந்த கொலை நடந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் வீட்டின் கதவு முன்பக்கம் பூட்டியிருந்ததால் யாருக்கும் இதுகுறித்து சந்தேகம் எழவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

கூவத்தூரில் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதா? கருணாஸ் விளக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே பல புலனாய்வு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன என்பது தெரிந்ததே....

முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழன் தான் முதல்வராகணும். பாரதிராஜா

தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று அவ்வப்போது சில அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கூறி வந்தபோதிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி முதல்வர்களாக இருந்தபோது இந்த குரல்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டது...

'ஓகே கண்மணி' நாயகனின் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் நாயகன் துல்கார் சல்மான் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் 'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடித்து வருகிறார்...

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' டீசர் ரிலீஸ் எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் மீண்டும் சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் தீபாவளி  தினத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

அதர்வாவின் 'வெண்ணிலா தங்கச்சி'யை ரிலீஸ் செய்யும் சமந்தா

அதர்வா, ரெஜினா நடிப்பில் இளவரசு ஓடம் இயக்கி வரும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...