close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் உண்டா? அவரே அளித்த விளக்கம்

Thursday, September 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இப்போதைக்கு ஷிவானி நாராயணன், ரியோ ராஜ் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறித்த புகைப்படங்கள் லீக் ஆனதால் இவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். மற்ற ஒரு சிலரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளிவந்தாலும் அது 100% உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை அவர் தற்போது மறுத்துள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்றும் நான் கலந்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் லட்சுமிமேனன் இல்லை என்பது உறுதியாகி உள்ளது

மேலும் இந்த நிகழ்ச்சியில் சஞ்சனா சிங், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ஆர்ஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரில்லா, பாடகர் வேல்முருகன், ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் இன்று காலை வெளியான தகவலின் படி மிஸ் சென்னை மாடல் அழகி சம்யுக்தா கார்த்திக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.