close
Choose your channels

தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இது குறித்து பல திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரம் குக்றித்து நெட்டிசன் ஒருவர் தனுஷ்- ஐஸ்வர்யா அழைத்து பேசி அவர்களுடைய பிரச்சனையை நீங்கள் தீர்த்து வையுங்கள் என கூறியபோது அதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘சட்டபூர்வமாக விவாகரத்து செய்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டாமல், ஒருவர் இன்னொருவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாமல் மரியாதையுடன் விலகி செல்கிறார்கள். எனவே தயவு செய்து அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைகளை ’சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தீர்த்துவைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் ’தயவு செய்து அவர்களை விட்டுவிடுங்கள்’ என தனுஷ் ஐஸ்வர்யாவை கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த பிரச்சனையை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் திரிக்கப்பட்ட செய்திகள் வெளிவரும் என்றும் அவர்களின் அனுமதியின்றி தவறான தகவல்கள் பரப்பப்படும் என்றும், மிகவும் கண்ணியமான அறிவிப்புக்கு பிறகும் நடிகை சமந்தா மிகவும் கொடூரமான விஷயங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் அதனால் பிரிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தவறில்லை என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.