ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கப்பட்ட மகன்கள்: மனித உரிமை ஆணையம் சென்ற தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Wednesday,September 23 2020]

தமிழ் நடிகை ஒருவரின் இரண்டு மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கியதை கண்டித்து,ம் அந்த நடிகை மனித உரிமை ஆணையத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 2004ஆம் ஆண்டு வெளிவந்த ’குடைக்குள் மழை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சத்தியராஜின் ’இங்கிலீஷ்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மதுமிதா. இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு தன்வின் கங்குலா, ககன் கங்குலா ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மதுமிதாவின் மகன்களான தன்வின் கங்குலா, ககன் கங்குலா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

இந்நிலையில் பள்ளி கட்டணங்களை குறைக்கும்படி மதுமிதாவும் அந்த பள்ளியில் படிக்கும் ஒருசில மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கூட்டாக அனைவரும் பள்ளி நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர் என்பதும் வாட்ஸ் அப் குழு ஆரம்பித்து கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென பள்ளி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லாமல் மதுமிதாவின் இரண்டு குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கு மதுமிதா மெயில் அனுப்பியும் பள்ளி நிர்வாகம் அதற்கு பதில் இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை மதுமிதா இந்த பிரச்சனையை தான் மனித உரிமை ஆணையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பள்ளி நிர்வாகத்திடம் கட்டணங்களை குறைக்க மட்டுமே கோரியதாகும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மதுமிதாவின் கணவர் சிவலாபாஜியும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகை ஒருவரின் மகன்களை பள்ளி நிர்வாகம் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

More News

சாலையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்: நடிகர் விஷ்ணுவிஷாலின் அதிரடி நடவடிக்கை!

தமிழ் சினிமாவில் இளைதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷால் என்பதும், சமீபகாலமாக தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் இவர் என்பதும் தெரிந்ததே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்ட முன்னணி ஆர்ஜே: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்: லீக் ஆன புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கடந்த ஒரு மாதமாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்த நிலையில்

விஜிபி சிலை மனிதன் குறித்த வதந்தி: அவரே அளித்த விளக்கம்

சென்னை விஜிபி கடற்கரையான கோல்டன் கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முதன் முதலில் பார்ப்பது வாயில் அருகே உள்ள அசையாமல் நிற்கும் நபரைத்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்தியக் காலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்திற்குச் சிறப்பிடம் வேண்டும்… கோரிக்கை வைத்த தமிழக முதல்வர்!!!

சமீபத்தில் இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்தது.