close
Choose your channels

படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திவிட்டேன்: ஒரு நடிகையின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Thursday, December 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாய்ப்புகள் வேண்டுமென்றால் படுக்கையை பகிர வேண்டும் என இயக்குனர்கள் கட்டாயப்படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று நடிகை ஒருவர் அடுத்து குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ’சக்தி’ என்ற படத்தில் நடித்த நடிகைகளை மஞ்சரி பட்நிஸ், அதன்பிறகு பல வாய்ப்புகள் வந்த பிறகும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

நான் தெலுங்கில் கடைசியாக சக்தி படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. என்னை புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் பல நடிகைகள் தாங்கள் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை இதுகுறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.