படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திவிட்டேன்: ஒரு நடிகையின் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

  • IndiaGlitz, [Thursday,December 12 2019]

வாய்ப்புகள் வேண்டுமென்றால் படுக்கையை பகிர வேண்டும் என இயக்குனர்கள் கட்டாயப்படுத்தியதால் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று நடிகை ஒருவர் அடுத்து குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த ’சக்தி’ என்ற படத்தில் நடித்த நடிகைகளை மஞ்சரி பட்நிஸ், அதன்பிறகு பல வாய்ப்புகள் வந்த பிறகும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

நான் தெலுங்கில் கடைசியாக சக்தி படத்தில் நடித்தேன். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. எனக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் நான் நடிக்கவில்லை. என்னை புதிய படங்களில் நடிக்க அழைத்த இயக்குனர்கள் எல்லோருமே தங்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். ஆசைக்கு இணங்கினால் தான் வாய்ப்பு தருவோம் என்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானேன். என் திறமை மீது நம்பிக்கை உள்ளது. படுக்கையை பகிர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் பல நடிகைகள் தாங்கள் படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை இதுகுறித்து குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஆபாச பட விவகாரம்: திருச்சியில் முதல் கைது

ஆபாச படம் பார்த்தவர்களின் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அவர்கள் முறைப்படி விசாரணை செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் சமீபத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் அறிவித்து இருந்தார்

வேலைக்காரனாய் நுழைந்து பேட்டையாய் மாறி தர்பார் நடத்தும் ரஜினி: பிரபல நடிகர் வாழ்த்து

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளை அடுத்து பல்வேறு துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இளையதிலகம் பிரபு அவர்கள் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள்

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்த என்ஜினீயர்: ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்

பெங்களூரில் உள்ள என்ஜினீயர் ஒருவர் ஆன்லைனில் தனது லைசென்சை புதுப்பிக்க முயற்சித்த போது சுமார் ஒரு லட்ச ரூபாயை இழந்த திடுக்கிடும் சம்பவம் குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது 

எதற்காக பி.எஸ்.எல்.வி-சி48 விண்ணில் ஏவப்பட்டது..!

இன்று (டிசம்பர் 11) மாலை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி48 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.