close
Choose your channels

நள்ளிரவில் கவர்ச்சி நடிகை வீட்டில் நடந்த சம்பவம்: சென்னையில் பரபரப்பு

Wednesday, July 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் விக்கி என்பவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கவர்ச்சி நடிகை மாயாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை மாயாவின் வீடு சாலிகிராமத்தில் உள்ளது. அங்கு அவர் தனது வீட்டின் முன் வழக்கமாக நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் காரை நேற்றும் நிறுத்தியிருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென காரை அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டதும் மாயாவும் அவரது குடும்பத்தினரும் வெளியே வந்து பார்த்தபோது கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாயா உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கு சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மாயாவின் மகனை மர்ம நபர்கள் சிலர் அடித்து காயப்படுத்திய நிலையில், அதே நபர்கள் தான் இந்த காரையும் அடித்து நொறுக்கி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.