பிரபல இயக்குனருடன் நெருக்கமான மீரா ஜாஸ்மின்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Sunday,May 29 2022]

பிரபல இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை மீரா ஜாஸ்மின் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாதவன் நடித்த ’ரன்’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ விஜய் நடித்த ’புதிய கீதை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மீராஜாஸ்மின். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு துபாயை சேர்ந்த தொழிலதிபர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜாஸ்மின் தற்போது கணவரை பிரிய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முயற்சித்து வருகிறார் என்றும், இதனால் அவர் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மலையாள இயக்குனர் அருண் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் மீரா ஜாஸ்மின் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை மீராஜாஸ்மின் அருண்கோபியை காதலிக்கிறாரா? அல்லது அருண்கோபி இயக்கும் அடுத்த படத்தில் மீரா நடிக்கப்போகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு மீராஜாஸ்மின் தரப்பில் இருந்து பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.