காதலுக்கு வயதில்லை: 52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் 'தனி ஒருவன்' பட நடிகை!

  • IndiaGlitz, [Friday,January 22 2021]

காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 52 வயது அஜித் பட வில்லன் நடிகர் ஒருவரை நடிகை ஒருவர் காதலிக்கும் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் நடித்த ’வேதாளம்’ உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ராகுல் தேவ். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார் என்பதும் இவருக்கு சித்தார்த் என்ற மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனைவி மறைந்தபின் பல வருடங்களாக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த ராகுல்தேவ் கடந்த சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த முக்தா கோட்சே என்ற நடிகையை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்தான் தமிழில் வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி காதலியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ராகுல் தேவ் மற்றும் ,முக்தா கோட்சே ஆகிய இருவருமே தங்களுடைய காதலை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த காதல் குறித்து நடிகை முக்தா கூறியபோது ’காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை. அதேபோல் காதல் என்பதை கேட்டு வாங்க முடியாது. அது தானாக வரும் ஒரு உணர்வு. எங்களுக்குள் எப்படி காதல் வளர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் முதல் முதலாக ஜூலை 3ஆம் தேதி சந்தித்துக் கொண்டதை அடுத்து அந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறோம்’ என்று கூறியுள்ளார். விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

டிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்!

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று முடித்ததோடு தனது காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆனார்

சேலம் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு! 4 தினங்களில் இருவருக்கு!

சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே, ஒழுங்குமுறை பணியில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது.

சிம்பு பட்டத்தை பிரேம்ஜிக்கு கொடுத்த பிக்பாஸ் நடிகர்!

லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை நடிகர் சிம்பு திரைப்படங்களில் பயன்படுத்தி வந்தார் என்பதும் தற்போது அவர் சிலம்பரசன் டிஆர் என்று மட்டுமே தனது பெயரை திரையில் பயன்படுத்தி வருகிறார்

போலீஸ் உடையணிந்து சினிமா பாணியில் கொள்ளை அடித்த திருடர்கள்… காவல் துறையின் அதிரடி!

கன்னியாக்குமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்து சிலர் போலீஸ் உடையணிந்து கொண்டு ரூ.80 லட்சம் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் சல்யூட் பல ரகம்… வித்தியாசம் தெரியுமா?

இந்தியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளிலும் சல்யூட் வைக்கும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது.