தந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட அசத்தலான புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அன்றைய தினம் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து, தந்தை குறித்த தங்களது மலரும் நினைவுகளை பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’தந்தையாகிய உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தந்தையர் தின வாழ்த்துக்கள்… என் வாழ்க்கையில் நீங்கள் அன்பிற்கும், அக்கறைக்கும் நன்றி’ என பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை நதியா தற்போது ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு பதிப்பில் கீதா பிரபாகர் என்ற காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், வெங்கடேஷ், மீனா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை நதியா இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.


 

More News

நடிகை அளித்த புகாரின் அடிப்படையில்  மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினியை திருமணம் செய்துகொள்வதாக கூறி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

மகத்-பிராய்ச்சி மிஸ்ரா மகனின் பெயர் இதுதான்!

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மகத், பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே

ஒரே காதலில் 2 மாங்கா....!   அம்புவிட்ட அர்ஜுனனுக்கு அடித்த லக்.....!

அத்தை மகள்கள் இருவரின் காதல் பிடிவாதத்தால்,  ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளார் மாமன் மகன்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நடிகரின் மனைவி: திமுகவில் இணைகிறாரா?

பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவி முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை பாராட்டிய நிலையில் அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காஜல் அகர்வால் விரைவில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்: வேண்டுகோள் விடுத்தது யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும், இவர் மும்பையை சேர்ந்த கௌதம் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்