close
Choose your channels

ஒருசிங்கம் எம்.எல்.ஏ ஆனால் எப்படி இருக்கும்? அண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்த தமிழ் நடிகை

Friday, March 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு சிங்கம் எம்எல்ஏ ஆனால் எப்படி இருக்கும் என அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தமிழ் நடிகை ஒருவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தமிழ் நடிகை நமீதா தற்போது மாநிலம் முழுவதும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் ’இந்த தொகுதியில் ஒரு ஐபிஎஸ் படித்த அதிகாரியே வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நல்லவர், சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்தும் அறிந்தவர். சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தவர். சிங்கம் மாதிரியான ஒரு போலீஸ் அதிகாரி நம்முடைய தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்றால் அவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் தாமரையில் வாக்களிக்க வேண்டும்.

அண்ணாமலை வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் சட்டம்-ஒழுங்கு எல்லாம் பாதுகாப்பாக இருக்கும், எல்லாமே சூப்பராக இருக்கும். ஒரு சிங்கமே எம்எல்ஏ வந்தால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்’ என்று நமிதா பிரச்சாரம் செய்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.