அதிரடி ஆக்சன் காட்சிகளில் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,April 05 2017]

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, விஜய் நடித்த 'புலி' உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தின் போலீஸ் கேரகரில் நடித்து வருகிறார்.

இந்த கேரக்டர் குறித்து நந்திதா கூறியபோது, 'இந்த படத்தில் எனக்கு ஜோடி யாரும் இல்லை. இந்த படத்தில் சாரா என்ற போல்டான போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் எனக்கு அதிரடி ஆக்சன் காட்சிகளும் உண்டு. இதுவரை ஹோம்லி கேரக்டரில் நடித்து வந்த நான், அந்த இமேஜை உடைப்பதற்காக எடுத்த புதிய முயற்சிதான் இந்த கேரக்டரை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம்.

மேலும் இந்த படத்தில் நான் அரவிந்தசாமியுடன் நடிக்கவுள்ளதாக கேள்விப்பட்டவுடன் எனது தோழிகள் என்னை பார்த்து பொறாமைப்பட்டார்கள். அவரது 'ரோஜா' படம் முதல் அனைத்து படங்களை பார்த்து ரசித்த எனக்கு அவருடனே நடிக்க வேண்டும் என்ற வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் கலந்த இந்த படம் நிச்சயம் எனக்கு ஒரு மாறுதலான படம் தான் என்று கூறினார். மேலும் ஏற்கனவே செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்து முடித்துள்ள நந்திதா 'சதுரங்க வேட்டை' தெலுங்கு ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.

அரவிந்தசாமி, ரித்திகாசிங், சாந்தினி தமிழரசன், சிம்ரன், கணேஷ் வெங்கட்ராமன், தம்பிராமையா, உள்பட பலர் நடித்து வரும் 'வணங்காமுடி' படத்தை செல்வா இயக்கி வருகிறார். டி.இமான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் ஏன் 'விஐபி 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கஜோல் கூறிய முக்கிய காரணம்

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார்...

அவ்வையாருக்கு பின் ஆர்.பி செளத்ரி படம்தான். எதில் தெரியுமா?

கடந்த 1953ஆம் ஆண்டு எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கே.பிசுந்தரம்பாள் நடித்த 'அவ்வையார்' திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அவ்வையார் விநாயகரை நோக்கி தவமிருக்கும்போது, அந்த தவத்தை கலைக்க எதிரிகள் முயற்சி செய்வார்கள்...

ரஜினி, அஜித் படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'பாகுபலி'

கோலிவுட் திரையுலகில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி மற்றும் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ரஜினி, அஜித் படங்களை அடுத்து எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக புக் ஆகியிருப்பதா

அஜித் பிறந்த நாளில் ஸ்பெஷல் காட்சியின் திட்டங்கள்

தல அஜித்தின் பிறந்தநாள் வரும் மே 1ஆம் தேதி வரவிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் தற்போதே அட்வான்ஸாக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்...

இசை நிகழ்ச்சிக்கு சென்ற எஸ்.பி.பிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரிந்ததே.