நயன்தாராவின் சம்பளம் பல மடங்கு உயர்வு.. இந்திய அளவில் இடம் பிடித்து ஆச்சரியம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா தனது அடுத்த படத்திற்காக மிகப்பெரிய சம்பளம் வாங்கி இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் இந்திய அளவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாகவும், தமிழில் அவர்தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார் என கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும், அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிரஞ்சீவி நடிக்க உள்ள தெலுங்கு படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தயாரிப்பு நிறுவனம் அணுகியதாகவும், அதற்கு நயன்தாரா ‘18 கோடி ரூபாய்’ சம்பளம் கேட்டதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் சம்பளத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா கேட்ட ரூ.18 கோடி சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க ஒப்புக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ‘பிரியங்கா சோப்ரா’ உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
இரண்டாவது இடத்தில் உள்ள ‘தீபிகா படுகோனே’ 15 முதல் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில், மூன்றாவது இடத்தில் ‘கங்கனா ரணாவத்’ உள்ளார். இவரும் 15 முதல் 30 கோடி ரூபாய் வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, நான்காவது இடத்தில் தற்போது நயன்தாரா வந்துவிட்டதாகவும், சிரஞ்சீவி படத்தில் அவர் 18 கோடி ரூபாய் சம்பளத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால், நயன்தாரா இந்திய அளவில் நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments