என் விரல்கள் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன.. பிரபல நடிகையின் சர்ச்சை பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

பிரபல மலையாள நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’என் விரல்கள் தொடை வழியாக பயணம் செய்கின்றன’ என சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்து நிர்வாணமாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’தொண்டி முதலும் திருசாட்சியும்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிமிஷா சஜயன். மேலும் அவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் விருதுகளையும் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’கிரேட் இந்தியன் கிச்சன்’ உள்பட அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. மேலும் இவர் தற்போது ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக நிமிஷா சஜயனின் பக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ என்று கவிதை வடிவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வரிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் உண்மையில் அவர்தான் பதிவு செய்தாரா? அல்லது யாராவது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து பதிவு செய்திருக்கிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு நிமிஷா என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென போன் செய்த நடிகர் அஜித்.. என்ன காரணம்?

முன்னாள் தமிழக முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் அஜித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்கொலை செய்ய முடிவெடுத்த தனுஷ் நாயகி.. ஆறுதல் கூறி காப்பாற்றிய ராகுல் காந்தி..!

 தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' சிம்பு நடித்த 'குத்து' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும் ஆனால் ராகுல் காந்தி தான் தனக்கு ஆறுதல்

யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சம்பள விவகாரம் குறித்து சமந்தா..!

ஹீரோவுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடம் நான் கெஞ்ச மாட்டேன் என நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அனுமதி மறுப்பு விவகாரம்.. வீடியோ வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்.!

சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வெளியான  நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் வைத்திருந்த இரண்டு நரிக்குறவர் சமூக ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே விட

'அகிலன்' உள்பட 4 தமிழ் படங்கள், மொத்தம் 14 படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.