close
Choose your channels

தனது வீட்டில் திருடிய திருடனுக்கு நன்றி கூறி வீடியோ பதிவு செய்த பிரபல நடிகை!

Friday, July 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் திருடு போனதை அடுத்து கதறி அழுது இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்ட நிலையில் அந்த வீடியோவை பார்த்த உடன் திருடன் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த நடிகை நிருஷா என்பவர் கன்னட படங்களிலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார் என்பதும் வீட்டில் இருக்கும் நேரத்தில் நாயுடன் தான் அவர் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நிருஷா வளர்த்த நாய் சமீபத்தில் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிருஷா தனது அம்மாவுடன் சென்று போலீசில் புகார் அளித்தார். ஆனால் இந்த நாய் பல நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான நிருஷா சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது தோழிகள் கொடுத்த அறிவுரையின்படி இன்ஸ்டாகிராமில் அந்த நாயை திருடியவர்கள் தயவு செய்து கொண்டு வந்து திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்றும் நாய் தொலைந்ததில் இருந்து தன்னால் சாப்பிடவும் தூங்கவும் முடியவில்லை என்றும் கதறி அழுது ஒரு வீடியோவை பதிவு செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் நாயை திருடிய திருடனும் வீடியோவை பார்த்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த நாயை அழைத்து கொண்டு வந்த திருடன், நிருஷா வீடு அருகே நாயை வைத்துவிட்டு நிருஷாவின் அம்மாவுக்கு போன் செய்து கூறியுள்ளார். இதனை அடுத்து நிருஷாவும் அவருடைய அம்மாவும் உடனடியாக வெளியே வந்து நாயை பார்த்தவுடன் சந்தோஷம் அடைந்தனர். நாய் கிடைத்த மகிழ்ச்சியில் நிருஷா தனது இன்ஸ்டாவில் நாயை கொண்டு வந்து கொடுத்த நபருக்கு நன்றி கூறி மீண்டும் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.