நான் இறந்தால் என் சொத்துக்கள் யாருக்கு? பிரபல நடிகை அனுப்பிய இமெயில்!

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

நான் இறந்தால் என்னுடைய சொத்துக்களை இவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என பிரபல நடிகை ஒருவர் இமெயில் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’ட்ரீம்ஸ்’ மற்றும் பிரசாந்த் நடித்த ‘புலன் விசாரணை 2’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படத்திலும், ஒருசில மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை பாருல் யாதவ். இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தான் பிழைக்க மாட்டோம் என்று முடிவு செய்து, ஒருவேளை தான் கொரோனாவால் இறந்து விட்டால் தனது இரண்டு சகோதரிகளுக்கும் சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என இமெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது ’கடந்த ஏப்ரல் மாதம் எனக்கும் என்னுடைய குடும்பத்தார் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக என்னுடைய அம்மாவுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. நான் மூன்றாவது மாடியில் தனிமைப்படுத்தி கொண்டேன். என் அம்மாதான் எனக்கு சாப்பாடு செய்து கொடுத்தார்.

நள்ளிரவில் திடீரென்று 100 டிகிரிக்கும் மேல் காய்ச்சல் இருக்கும். அப்போது எல்லாம் நான் இனிமேல் பிழைக்க மாட்டேன் என்றே நினைப்பேன். பலமுறை நான் டாக்டருக்கு போன் செய்து ஆலோசனை கேட்பேன். மேலும் ஒருவேளை நான் இறந்து விட்டால் என் சொத்துக்களை இரண்டு சகோதரிகளுக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று இ-மெயில் அனுப்பினேன். அந்த இமெயிலை பார்த்து எனது சகோதரிகள் அழுதார்கள். உனக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஒருநாள் நள்ளிரவில் திடீரென 103 டிகிரி காய்ச்சல் வந்தது. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று டாக்டரிடம் போன் செய்து கூறுவேன். அப்போது அவர்தான் எனக்கு நம்பிக்கை கொடுப்பார். நம்பிக்கையுடன் இருந்தால் கண்டிப்பாக இந்த நோயில் இருந்து மீளலாம் என்று அவர் கூறுவார். அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் இன்று உயிரோடு இருக்கிறேன் என்று கூறினார். அவருடைய இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பாக்சிங் கற்று கொள்ளும் பிரபல நடிகை: வைரல் வீடியோக்கள்!

பிரபல தமிழ் நடிகை ஒருவர் பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

லிங்குசாமியின் அடுத்த படத்தில் இணைந்த அஜித் பட நடிகை!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்திநேனி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்

5 மொழிகளில் விஜய்சேதுபதியின் அடுத்த படம்: இன்னொரு ஹீரோவும் இணைகிறார்.

ஐந்து மொழிகளில் தயாராக உள்ள விஜய்சேதுபதியின் படத்தில் இன்னொரு ஹீரோவும் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

மகனை பார்த்து பெருமைப்படும் அருண்விஜய்: வைரல் புகைப்படம்!

சூர்யா தயாரித்து வரும் திரைப்படம் ஒன்றில் அருண் விஜய் மகன் அர்னவ் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஆபாச பேச்சில் 50-ஐ வீழ்த்திய 25...! சபலத்தால் வந்த வினை… கம்பி எண்ணும் நிலை…!

பேஸ்புக்கில் காதல் வலை வீசியும், வாட்ஸ் அப்பில் ஆபாச சேட் செய்தும், 50 வயதுடைய தொழிலதிபரிடம் பல லட்சங்களை கறந்துள்ளார் ஜனனி. இதனால் அந்தப்பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.