'அர்ஜூன் ரெட்டி' படத்தை மிஸ் செய்தது உண்மைதான்: பிரபல நடிகை

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் தமிழிலும் ‘ஆதித்யவர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அதில் துருவ் விக்ரம் அறிமுகமானார் என்பதும் தெரிந்ததே. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெலுங்கு திரையுலகின் ஆச்சரியமான ஒன்றாகும்.

இந்த நிலையில் ’அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நாயகி வேடத்தில் ஷாலினி பாண்டே நடித்திருந்தார் என்பதும் அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் நாயகி கேரக்டரில் முதலில் நடிக்க பார்வதி நாயர் இடம் பேசப்பட்டதாகவும், அதற்கு அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சமூகத்தில் பதிலளித்த பார்வதி நாயர் ’அர்ஜுன் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான். அந்த படம் மிக நல்ல படம். நான் அந்த படத்தை தவற விட்டுவிட்டு இருக்க கூடாது. ஆனால் எதுவாக இருந்தாலும் நமக்கு என கிடைப்பது மட்டும்தான் கிடைக்கும். அதைவிட இன்னும் நல்ல படங்கள் எனக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் அஜித்தின் ’என்னை அறிந்தால்’, கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த பார்வதி நாயர், தற்போது ’ஆலம்பனா’ என்ற தமிழ் படத்திலும் ’83’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் குடும்பத்திற்கு வரும் பிரபல நடிகரை வரவேற்ற ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழ் திரையுலகில் நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் ஆகியோர் இயக்குனர்களாக கடந்த சில ஆண்டுகளில் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

எமனாக மாறும் Chair சிட்டிங்? தப்பித்துக் கொள்ள எளிய டிப்ஸ்!

நீண்ட ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன், அடிவயிற்றில் கொழுப்பு, நீரிழிவு, இதயநோய் முதற்கொண்டு புற்றுநோய் வரை பல உடல்பாதைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பில் ஜோதிகா: வைரல் புகைப்படங்கள்!

சூர்யா நடித்துவரும் 40வது திரைப்படமான 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ்,

நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன்: பவர்ஸ்டார் முன்னிலையில் வனிதா பேச்சு!

நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்: காரணம் இதுதான்!

நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா தம்பதிக்கு நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.