சூர்யாவை அடுத்து சுற்றுச்சூழல் கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் கொள்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இது குறித்து தங்களது ஆக்கபூர்வமான கருத்தை தெரிவித்தார்கள். அதுமட்டுமின்றி சுற்றுச் சூழல் கொள்கையின் வரைவு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்த நிலையில் இதன் தமிழாக்கத்தையும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பதும் இந்தக் கொள்கை குறித்த கருத்துக்களை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யா, கார்த்தியை அடுத்து தற்போது நடிகை பார்வதியும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் 2020 கொள்கைக்கு எதிரான தனது கருத்தை தெரிவிப்பதோடு இது குறித்து அவர் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்

இந்திய மக்கள் பெரும்பாலானோர் புரிந்துகொள்ள முடியாத ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த வரைவு வெளியிடுவதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள நடிகை பார்வதி, அனைத்து இந்திய மொழிகளிலும் இதனை மொழிபெயர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள் புரிந்து கொள்ள முடியாத இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுச்சூழல் வரைவு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது இந்திய மக்களின் மீது அக்கறை இல்லையா என்ற கேள்வியையும் பார்வதி தனது கடிதத்தில் எழுப்பியுள்ளார்.

மேலும் உங்களுக்கு புரியும் வகையில் எனது எதிர்ப்பு கடிதத்தை நான் ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன் என்றும் அதே போல் மக்களுக்கு புரியும் இந்திய மொழிகளில் இந்த வரைவு அறிவிப்பை நீங்கள் வெளியிட வேண்டும் என்று என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பார்வதியின் இந்த கடிதம் குறித்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

அஜித்தால் மோகன்லால் படத்தை தள்ளி வைத்தாரா சிரஞ்சீவி? பரபரப்பு தகவல்

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் கடந்த ஆண்டு 'சயிர நரசிம ரெட்டி' படத்தின் மூலம் பிரமாண்டமாக ரீ-என்ட்ரி ஆனார் என்பதும் அந்த படத்தை அடுத்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில்

பெய்ரூட் மக்களுக்காக ஆபாச நடிகை எடுத்த அதிரடி முடிவு: பரபரப்பு தகவல் 

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடித்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

கேலி செய்த ஆசிரியருக்கு வெற்றியை சமர்ப்பணம் செய்த மாணவர்: போஸ்டர் அடித்து கொண்டாட்டம்!

பத்தாம் வகுப்பில் பாஸ் ஆக மாட்டேன் என்று கேலி செய்த ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்று தனது வெற்றியை போஸ்டர் அடித்து கொண்டாடிய மாணவர் ஒருவர், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து உள்ளது

'ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' தொடக்கம்: நித்தியானந்தா அதிரடி

பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இந்திய போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது

மாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: ரசிகர்கள் பிரார்த்தனை 

தமிழில் மாதவன் நடித்த 'எவனோ ஒருவன்' என்ற திரைப்படத்தை இயக்கியவரும் பிரபல பாலிவுட் இயக்குனருமான நிஷிகாந்த் காமத் என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து