விவாகரத்தாகி 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி!

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்று 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ஒருவருக்கொருவர் திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியாமணி ஒன்று என்பது தெரிந்ததே. இருவரும் ’நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்து அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சட்டரீதியாக விவாகரத்து பெற்றனர். தற்போது இரண்டு குழந்தைகளும் பிரியா ராமன் உடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தற்போது ’செம்பருத்தி’ உள்பட ஒரு சில சீரியல்களில் பிரியா ராமன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாள் குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’என் அன்பு தங்கங்களே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் பிரியாராமன் உடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

உலகின் 3 ஆவது பெரிய வைரம் கண்டுப்பிடிப்பு… எடையைக் கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்…

தென் ஆப்பிரிக்கா நாடான போஸ்வானா நாட்டில் தற்போது உலகின் 3 பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

'தளபதி 65' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

டெல்லியில் தோனியை சந்தித்த தமிழக அமைச்சர்: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று டெல்லி சென்றார் என்பதும் அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்தினார் என்பதும் தெரிந்ததே.

13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுவிஸ் வங்கியில் குவிந்த இந்தியர்களின் பணம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய வங்கி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியர்களின் பணம் அந்நாட்டு வங்கிகளில் குவிந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

USஇல் கடந்த 2019 ஆம் ஆண்டே கொரோனா பாதிப்பு இருந்தது? வெளியான பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டே அமெரிக்காவின் 5 முக்கிய மாகாணங்களில் 7 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக சீனாவை சேர்ந்த தொற்றுநோயியல்