பாடலாசிரியையாக மாறிய 'சென்னை 28' பட நடிகை

  • IndiaGlitz, [Saturday,June 24 2017]

தனுஷ், சிம்பு உள்பட ஒருசில நடிகர்கள் பாடலாசிரியர்களாகவும் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் தற்போது ஒரு நடிகையும் பாடலாசிரியையாக மாறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' உள்பட பல படங்களில் நடித்தவரும் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகளுமான நடிகை விஜயலட்சுமி தற்போது ஒரு படத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின்னர் வேறு படங்களில் நடிகை விஜயலட்சுமி நடிக்கவில்லை என்றாலும் அவரது கணவர் பெரோஸ் இயக்கி வரும் 'பண்டிகை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு முக்கிய பாடலை எழுத பிரபல கவிஞர்களிடம் சென்றும் திருப்தி அடையாமல் இருந்த கணவர் பெரோஸிடம், தானே அந்த பாட்டை எழுதுவதாக விஜயலட்சுமி கூறினாராம்.

பின்னர் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரம் கம்போஸ் செய்த டியூனுக்கு 'அடியே' என்று தொடங்கும் ஒரு பாடலை விஜயலட்சுமி எழுதியதாகவும், அந்த பாடலின் வரிகள் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலை நிகிதா என்பவர் பாடியுள்ளார்.

கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், உள்பட பலர் நடித்து வரும் 'பண்டிகை' திரைப்படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது.

More News

'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 பேர் இவர்களா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது.

வெங்கட்பிரபுவின் அடுத்த 'பார்ட்டி'யில் ரெஜினா, சஞ்சிதா, நிவேதா

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு கடந்த ஆண்டு 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆகிய விபரங்கள் வெளிவந்துள்ளது...

கமல்ஹாசனுக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜ் எடுக்கும் வித்தியாசமான முயற்சி

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் வெளியாகிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு

அதிமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏவான கருணாஸ் உள்பட 3 எம்.எல்.ஏக்கள் சற்று முன்னர் திடீரென எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு, நெடுவாசலை அடுத்து கமல்ஹாசனின் அடுத்த குரல்

உலக நாயகன் கமல்ஹாசன் திரைத்துறையில் தொடர்ந்து சாதனை செய்வது மட்டுமின்றி அவ்வப்போது சமூக பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருபவர் என்பதும், அவர் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்றாலும் அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சிக்கும் குணம் படைத்தவர் என்பதும் தெரிந்ததே.