close
Choose your channels

போதைப்பொருள் விவகாரம்: ஊடகங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்ற தமிழ் நடிகை!

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா, போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. அவரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தபோது இந்த விவகாரத்தில் நடிகைகள் ரகுல்பிரீத்தி சிங் மற்றும் சாரா அலிகான் ஆகியோர்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை காவல்துறையினர் மறுத்தனர். ரியாவிடம் விசாரணை செய்தபோது அவர் எந்த ஒரு நடிகர் நடிகைகளின் பெயரையும் கூறவில்லை என்று தெரிவித்தனர். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தன்னுடைய பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரகுல்பிரீத்தி சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் காட்டிய வழிமுறைகளின்படி ஊடகங்கள் செயல்படவில்லை என்றும் அவர்தான் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த மனு குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.