close
Choose your channels

சென்னை வெள்ள நிவாரணம்: ரம்பா, எம்.எஸ்,பாஸ்கர் நிதியுதவி

Monday, December 14, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெள்ள பாதிப்பினால் சென்னைக்கு ஏற்பட்ட துயரை துடைக்க இந்திய திரையுலகமே திரண்டு வந்து நிதியுதவி, பொருளுதவி செய்து வரும் நிலையில் சென்னை தற்போது மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் முன்னாள் நடிகை ரம்பாவும் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரும் வெள்ள நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் கோலிவுட்டின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ரம்பா, கடந்த சில வருடங்களுக்கு கனடா தொழிலதிபரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். ஆனாலும் சென்னை வெள்ள பாதிப்பு குறித்து கேள்விப்பட்டு தனது பங்களிப்பாக ரூ.5 லட்சத்தை அவர் நிவாரண நிதியாக அனுப்பியுள்ளார்

இதேபோல் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களில் ஒருவரான எம்.எஸ்.பாஸ்கர் ரூ.1 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்த தொகையை காசோலையாக நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களிடம் எம்.எஸ்.பாஸ்கர் நேற்று வழங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.