நடிகை ரம்பாவின் 2வது குழந்தையின் பெயர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 04 2015]

"உள்ளத்தை அள்ளித்தா" படத்தின் மூலம் 2000ஆம் ஆண்டுகளில் இளைஞர்களின் உள்ளங்களை கவர்ந்த நடிகை ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்நாட்டிலேயே செட்டில் ஆனார். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் குழந்தையும், கடந்த மார்ச் 31ஆம் தேதி இரண்டாவது குழந்தையும் ரம்பாவுக்கு பிறந்தது.


இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த குழந்தைக்கு ரம்பா தம்பதியினர் பெயர் வைத்துள்ளனர். இரண்டாவது குழந்தைக்கு ரம்பா தேர்வு செய்த பெயர் 'சாஷா' என்பதாகும். இந்த தகவலை தனது சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ள ரம்பா, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் அதில் பதிவு செய்துள்ளார். ரம்பாவின் முதல் குழந்தையின் பெயர் லாவண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்துவேறுபாடு என்றும், இருவரும் பிரியவுள்ளார்கள் என்றும் சமீபத்தில் கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ரம்பா, கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக உள்ள இந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

More News

'எந்திரன் 2' படத்தின் நாயகி தீபிகா படுகோனே?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

'வந்தேண்டா பவர்க்காரன்'. ரஜினி வேடத்தில் பவர் நடிப்பது உண்மையா?

சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா' படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்ட கொடுத்ததாக கூறப்படும் பிரச்சனையை மையமாக வைத்து....

ரஜினி-ஷங்கர் இணையும் 'எந்திரன் 2' பணிகள் ஆரம்பம்

கடந்த 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன்' படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்த

பாபநாசம்- திரைவிமர்சனம்

கமல்ஹாசன் - மோகன்லால் இணைந்து நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்தில் யார் சூப்பராக நடித்திருப்பார்கள் என ஒரு பட்டிமன்றம் வைத்தால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு நடித்திருப்பார்கள்........

விஜய்-அட்லி படத்தில் சத்யராஜ் வில்லன்?

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடக்கிய சத்யராஜ், அதன்பின்னர் ஹீரோவாக புரமோஷன் ஆனார்.......